அரசியலமைப்பு ரீதியிலான தீர்வு அவசியம்: சம்பந்தன் வலியுறுத்தல்

by Staff Writer 18-12-2019 | 7:45 PM
Colombo (News 1st) அரசியலமைப்பு ரீதியிலான தீர்வு அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார். இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவிலேயே அவர் இதனைக் கூறினார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த விழா இடம்பெற்றது. இந்த விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பங்காளி கட்சிகளான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.