பல பகுதிகளில் 150 மி.மீ வரை மழை வீழ்ச்சி பதிவாகும்

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்

by Staff Writer 17-12-2019 | 3:30 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 முதல் 150 மில்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.