கேகாலை நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை

கேகாலை நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை

by Staff Writer 17-12-2019 | 8:51 PM
Colombo (News 1st) கேகாலை நீதிமன்ற வளாகத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 36 வயதான குறித்த பெண் ஜீவனாம்ச வழக்கிற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவரது விவாகரத்தான கணவர் கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து, அந்நபர் அதே இடத்தில் கைது செய்யப்பட்டார். கத்திக்குத்திற்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் 5 மற்றும் 11 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.