சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்கா எச்சரிக்கை

by Staff Writer 17-12-2019 | 7:56 PM
Colombo (News 1st) நத்தார் பண்டிகைக் காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்படும் இரண்டாம் நிலை முன்னெச்சரிக்கை இதுவென ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.