இந்திய குடியுரிமை ​கோரும் இலங்கை அகதிகள்  

இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை அகதிகள் கோரிக்கை

by Staff Writer 17-12-2019 | 8:24 PM
Colombo (News 1st) இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சமடைந்த இலங்கையர்கள் தமக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் இராமநாதபுரம் - மண்டபம் முகாமில் அகதிகளாக வசித்து வரும் மக்கள் தாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். மூன்று தலைமுறையாக தமிழகத்தில் வசித்தும் தங்களுக்கு குடியுரிமை கிடைக்காததால், அகதி என்ற பெயரிலேயே தாம் வாழ்வதாக அவர்கள் கவலை வௌியிட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட போர் காரணமாக தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்கள் பலர் அங்கு பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர்.