ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர்

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர்

by Fazlullah Mubarak 16-12-2019 | 12:25 PM

ஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளார்.

சொப்ட்லொஜிக் ஹோல்டிங் பி எல் சி நிறுவனத்தின் தலைவரான அஷோக் பத்திரகே நாட்டின் முன்னிலை வர்த்தகராவார். ஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளதாக அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை நியமிப்பதற்கு பரிந்துரை செய்வதற்கான குழுவின் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்தார். இதற்கமைய, தாம் கடமைகளை பொறுப்பேற்றதாக அஷோக் பத்திரகே நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.