மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள ஆலோசனை

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள ஆலோசனை

by Staff Writer 16-12-2019 | 3:57 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் செயற்பாடுகள் குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் தௌிவுபடுத்திய ஜனாதிபதி, தற்போது முன்னெடுக்கக்கூடிய துரித செயற்பாடுகள் தொடர்பில் மேல் மாகாண ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.