Drone கெமரா தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பம்

Drone கெமரா தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பம்

by Staff Writer 15-12-2019 | 1:19 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில், Drone கெமரா தொடர்பில் கணக்கெடுப்பொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டம் கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது அனைத்து Drone கெமராக்களுக்கும் பதிவிலக்கம் வழங்கப்படவுள்ளது. இந்தக் கணக்கெடுப்பின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் தரவுகளின் பிரகாரம், Drone கெமராக்களைப் பயன்படுத்துவதற்கான புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, Drone கெமரா தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அந்தத் தடைகளைத் தளர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை மேலும் கூறியுள்ளது.