பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்

பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்

by Staff Writer 14-12-2019 | 3:50 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கான ஆசனங்களை பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே அதிகமென்பதால் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருடத்தின் முதலாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஏனைய செய்திகள்