கொழும்பின் பல பகுதிகளில் இன்றிரவு நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 14-12-2019 | 3:59 PM
Colombo (News 1st) கொழும்பு 05, 06 ஆகிய பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் இன்றிரவு 8 மணி தொடக்கம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பிரதான நீர்விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக இன்று இரவு 8 மணி தொடக்கம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09,10, 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் முழுமையாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 05, 06 பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு நகர சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஒருவரால் தெமட்டகொட பகுதியில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது நேற்று நீர் விநியோகக் குழாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர்க்குழாய்களின் புனரமைப்பு காரணமாக இன்றிரவு 8 மணி தொடக்கம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டக்காட்டியுள்ளது.