சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது

கரடியனாறு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது

by Staff Writer 14-12-2019 | 5:07 PM
Colombo (News 1st) கரடியனாறு - பெரியபுல்லுமலை, பனிச்சேனை பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.