கடத்தல் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட்ட இருவர் கைது

by Staff Writer 14-12-2019 | 3:43 PM
Colombo (News 1st) கடத்தல் சம்பவ​மொன்று தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வௌியிட்ட இருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அவர்கள் இருவரும் ஊடக சந்திப்பில் ராஜித சேனாரத்னவுடன் கலந்துகொண்டிருந்தனர். இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.