பேரறிவாளனின் பிணை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

பேரறிவாளனின் பிணை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

by Bella Dalima 13-12-2019 | 4:12 PM
Colombo (News 1st) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பிணை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் ஒரு மாத கால பிணை நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அதனை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து உத்தரவிடுமாறு அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பிணை உத்தரவை நீடித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்துக்கொள்ளவும் பேரறிவாளனின் சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அவருக்கு கடந்த மாதம் 12 ஆம் திகதி ஒரு மாத கால பிணை வழங்கப்பட்டது.