கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 24 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 13-12-2019 | 3:42 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை (14) இரவு 8 மணி தொடக்கம் நாளை மறுதினம் (15) இரவு 8 மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர நீர் விநியோக கட்டமைப்பின் புனரமைப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 01, 10, 11, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை இரவு 8 மணி தொடக்கம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த காலப்பகுதியில் கொழும்பு 2 மற்றும் கொழும்பு 9 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.