கிளிநொச்சியில் விபத்தில் இருவர் பலி

கிளிநொச்சியில் விபத்தில் இருவர் பலி

by Staff Writer 13-12-2019 | 3:36 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - பளை, கரந்தாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று நண்பகல் 12 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பளை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.