ஆட்கடத்தலைத் தடுக்க இணக்கப்பாடு

ஆட்கடத்தலைத் தடுக்க அவுஸ்திரேலியா - இலங்கை இடையில் இணக்கப்பாடு

by Staff Writer 13-12-2019 | 4:05 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் ஆட்கடத்தலைத் தடுப்பதற்கான ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் ஆட்கடத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.