துறைமுகங்கள் அதிகார சபைக்கு புதிய தலைவர் 

துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவராக ஜெனரல் தயா ரத்னாயக்க நியமனம்

by Bella Dalima 12-12-2019 | 3:37 PM
Colombo (News 1st) முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க, துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் 20 ஆவது தளபதியாக ஜெனரல் தயா ரத்னாயக்க சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.