நியூ ஜேர்சியில் துப்பாக்கிச் சூடு ; அறுவர் பலி

நியூ ஜேர்சி மாநிலத்தில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு ; அறுவர் பலி

by Chandrasekaram Chandravadani 11-12-2019 | 7:49 AM
Colombo (News 1st) அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட குறைந்தது அறுவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிதாரிகள் விற்பனை நிலையம் ஒன்றிற்குள் மறைந்ததைத் தொடர்ந்து பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நியூ ஜேர்சி மாநிலத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் விற்பனை நிலைங்கள் மூடப்பட்டுள்ளன. தாக்குதல் முன்னெடுக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுவொரு பயங்கரவாதத் தாக்குதலாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.