21/4 ; இடைக்கால அறிக்கையை கையளிக்க நடவடிக்கை

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை

by Staff Writer 11-12-2019 | 6:58 AM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆ​ணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதி, ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பிலான விசேட நிபுணர், பேராசிரியர் ரொஹான் குணரத்ன நேற்றைய தினம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்கவே அவர் சாட்சியம் வழங்கியுள்ளார். இதுவரை 20 இற்கும் அதிகமானோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கொழும்பு பேராயர் பேரருட்திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் சாட்சியம் வழங்கியிருந்தார். ஆணைக்குழுவிற்கு 106 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் சாட்சி விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.