ஜா-எல உள்ளிட்ட பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு

ஜா-எல உள்ளிட்ட பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 10-12-2019 | 8:44 AM
Colombo (News 1st) ஜா-எல நீர்ப்பாசனக் கட்டமைப்பில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் இன்று (10) காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான நீர்வழங்கல் மார்க்கத்தில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நுகபே, உஸ்வெடகெய்யாவ, போபிட்டிய, சேதுவத்தை உள்ளிட்ட பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.