தங்கம் கடத்திய நால்வர் கைது

இந்தியாவிலிருந்து படகு மூலம் 10 கிலோகிராம் தங்கம் கடத்தல்: நால்வர் கைது

by Staff Writer 10-12-2019 | 4:45 PM
Colombo (News 1st) கல்பிட்டி - குடாவ கடற்பகுதியில் 10 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 900 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக சந்தேகநபர்கள் படகு மூலம் தங்கம் கடத்துகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கந்தக்குளிய மற்றும் கல்பிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.