ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு

ரயில் ​சேவை தொடர்பிலான மீளாய்விற்கு குழு நியமனம்

by Staff Writer 09-12-2019 | 4:25 PM
Colombo (News 1st) ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் சேவையில் காணப்படும் வரவு, செலவு மற்றும் இலாப நட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் போக்குவரத்து பொதுமக்களுக்கான சேவை என்பதால், ரயில் போக்குவரத்துத் துறை தொடர்பில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவினூடாக சிக்கல்களை நிவர்த்திப்பதற்கு எதிர்பார்ப்பதுடன், ரயில் மார்க்கங்களை புனரமைப்பதுடன் புதிய மார்க்கங்களை அமைக்கவும் எதிர்பார்ப்பதாக ரயில் போக்குவரத்துத் துறை அமைச்சர் C.B. ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பற்றுச்சீட்டுக்குப் பதிலாக போக்குவரத்து முற்கொடுப்பனவு அட்டையை விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.