by Fazlullah Mubarak 08-12-2019 | 9:15 PM
கொழும்பு துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை துறைமுக நகரின் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உயர் மட்ட ஒத்துழைப்பை வழங்கும் என பிரதமர் நேற்று தெரிவித்ததாக ஷீன்ஹூவா பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டது.
கொழும்பு துறைமுக நகரை இலங்கையின் வரைபடத்துடன் இணைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அங்கு நடைபெற்ற உள்ளக கலந்துரையாடலில் பிரதமர் இதனைக் கூறியுள்ளதாக ஷீன்ஹூவா பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுக நகரின் நிர்மாணப் பணிகளுக்காக அரச தரப்பில் இருந்து தயாரிக்கப்பட வேண்டிய தேர்தெடுக்கப்பட்ட கொள்கையை எதிர்வரும் ஜனவரி மாதமாகும் போது தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இதன்போது பிரதமர் கூறியதாக இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.