by Staff Writer 07-12-2019 | 4:29 PM
Colombo (News 1st) திருகோணமலை - மனையாவௌி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
4 வயதான சிறுவன் தனது வீட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.