திருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

திருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி

by Staff Writer 07-12-2019 | 4:29 PM
Colombo (News 1st) திருகோணமலை - மனையாவௌி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 4 வயதான சிறுவன் தனது வீட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.