அங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது

அங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது

by Staff Writer 07-12-2019 | 4:10 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் முல்லேரியா, அங்கொட பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வசமிருந்து 1 கிலோ 35 கிராம் நிறையுடைய கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்தனர்.