வௌிநாடு சொல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு

தொழில் நிமித்தம் வௌிநாடு சொல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது

by Staff Writer 05-12-2019 | 3:35 PM
Colombo (News 1st) தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு சொல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டு தொழிலுக்கு பதிவு செய்வதற்காக அறவிடப்பட்ட 17,837 ரூபா கட்டணம், 16,416 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 3,456 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 3,755 ரூபா அறவிடப்பட்டது. புதிய அரசாங்கத்தின் வரிச்சலுகைகளின் கீழ் கட்டணக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.