63 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான 63 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 05-12-2019 | 3:26 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நுவரெலியாவில் தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினருடன் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.