சிற்றுண்டிச்சாலைகளை பரிசோதிக்க திட்டம்

தூர சேவை பஸ்கள் நிறுத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளை பரிசோதிக்க திட்டம்

by Staff Writer 04-12-2019 | 4:07 PM
Colombo (News 1st) தூர சேவையில் ஈடுபடும் பஸ்கள் நிறுத்தப்படும் சிற்றுண்டிச்சாலை மற்றும் ஹோட்டல்களை பரிசோதனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கவனத்திற்கொண்டு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் பிரகாரம், அனைத்து மாவட்டங்களிலும் பயணிகளின் வசதி தொடர்பில் ஆராய்வதற்கு முகாமையாளர் ஒருவரை நியமிப்பதாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம தெரிவித்துள்ளார். தரமுடைய பகுதிகளிலேயே பஸ்களை நிறுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிற்றுண்டிச்சாலைகளை மேம்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம கூறியுள்ளார்.