விசா விதிமுறைகளை மீறிய வௌிநாட்டவர்கள் 21 பேர் கைது

விசா விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் 21 பேர் கைது

by Staff Writer 03-12-2019 | 3:59 PM
Colombo (News 1st) விசா விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் 21 பேர் வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டியவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தியர்கள் 19 பேரும் பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் விசா காலம் நிறைவடைந்த நிலையில், வெல்லம்பிட்டிய பகுதியில் கட்டட நிர்மாணப்பணி இடம்பெறும் பகுதியில் பணிபுரிந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கயான் மிலிந்த தெரிவித்தார். 25 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வௌிநாட்டவர்கள் மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.