பூஜித், ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிப்பு

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 03-12-2019 | 3:54 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 10 பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக வழக்கின் முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மன்றுக்கு தெரிவித்துள்ளனர்.