பிரியங்கர ஜயரத்னவிற்கு எதிரான வழக்கு வாபஸ்

சிவில் விமான சேவை முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு எதிரான வழக்கு வாபஸ்

by Staff Writer 03-12-2019 | 3:40 PM
Colombo (News 1st) சிவில் விமான சேவை முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் அனுமதியின்றி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதனை வாபஸ் பெறுவதாக ஆணைக்குழு அறிவித்ததை அடுத்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று உத்தரவிட்டார். சிவில் விமான சேவை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான 3,30,000 ரூபா நிதியை மாரவில பகுதியிலுள்ள கேட்டரிங் நிறுவனமொன்றுக்கு வழங்கியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.