சமஷ்டி தீர்விற்கு இந்தியா உதவ வேண்டும்

சமஷ்டி தீர்வை ஏற்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

by Staff Writer 03-12-2019 | 3:20 PM
Colombo (News 1st) இணைந்த வடக்கு, கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையிலான சமஷ்டி தீர்வை ஏற்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். 13 ஆவது திருத்த சட்டம் எந்த அடிப்படையிலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகள் மற்றும் உடனடியான பிரச்சினைகளைக் கூட தீர்க்கமாட்டாது என அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரப் பரவலாக்கம் என்று கூறினாலும் பல்வேறு குறைபாடுகளை 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநரே நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருப்பதாகவும் தான் முதலமைச்சராக இருந்தபோது சில அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை இதற்கு ஒரு சிறந்த உதாரணம் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.