English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Dec, 2019 | 3:40 pm
Colombo (News 1st) சிவில் விமான சேவை முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் அனுமதியின்றி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதனை வாபஸ் பெறுவதாக ஆணைக்குழு அறிவித்ததை அடுத்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று உத்தரவிட்டார்.
சிவில் விமான சேவை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான 3,30,000 ரூபா நிதியை மாரவில பகுதியிலுள்ள கேட்டரிங் நிறுவனமொன்றுக்கு வழங்கியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
27 May, 2022 | 05:04 PM
24 Feb, 2022 | 04:50 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS