23,500 மில்லியன் ரூபா பெறுமதியான முறிகள் விநியோகம்

23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகிக்கப்படவுள்ளன

by Staff Writer 30-11-2019 | 4:35 PM
Colombo (News 1st) 23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம் எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி வரை பிணை முறிகளை சமர்ப்பிக்க முடியும். அதற்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் 6 ஆம் திகதி செலுத்த வேண்டுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.