மட்டக்களப்பில் 24 கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பில் 24 கைக்குண்டுகள் மீட்பு

by Staff Writer 30-11-2019 | 5:34 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் 24 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் காஞ்சிரங்குடா பகுதியில் கைக்குண்டுகள் சிலவற்றைக் கண்ட பிரதேச மக்கள், பொலிஸாருக்கு நேற்று (29) மாலை அறிவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் இன்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது 24 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட குண்டுகள் அந்த இடத்திலேயே விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்க செய்யப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.