அரசியலில் மீண்டும் பிரவேசிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

by Staff Writer 30-11-2019 | 6:24 PM
Colombo (News 1st) அரசியலில் மீண்டும் பிரவேசித்து மக்களுக்கான சேவையைத் தொடரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில், பொலன்னறுவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் ஒன்றியத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.