உச்சபட்ச சில்லறை விலையில் அரிசி விநியோகம்

பண்டிகைக் காலத்தில் உச்சபட்ச சில்லறை விலையில் அரிசி விநியோகம்

by Staff Writer 29-11-2019 | 7:04 PM
Colombo (News 1st) எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி உச்சபட்ச சில்லறை விலையில் அரிசியை விநியோகிக்க உத்தேசித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியத்தில் உள்ள அரிசியை சதொச விற்பனை நிலையங்களினூடாக சந்தைக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களினூடாக கடந்த பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் குறித்த களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.