கடந்த அரசாங்கத்தின் திட்டங்களுக்காக பாரிய நிதி செலுத்தப்பட வேண்டியுள்ளது: வாசுதேவ நாணயக்கார

by Bella Dalima 29-11-2019 | 8:18 PM
Colombo (News 1st) கடந்த அரசாங்கத்தின் திட்டங்களுக்காக பாரிய நிதி செலுத்தப்பட வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று தெரிவித்தார். கடந்த அரசாங்கம் எந்த கொடுப்பனவையும் செலுத்தியிருக்கவில்லை எனவும் என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா, கம்பெரலிய என பல்வேறு வகையில் அவர்கள் செலவிட்டதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டினார். இதனால், செயலாளர்களுடன் இணைந்து தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வாசுதேவ நாணயக்கார நீர் விநியோக இராஜாங்க அமைச்சராக தனது கடமைகளை ஆரம்பித்த சந்தர்ப்பத்திலேயே இதனை தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் பிரசன்னமாகியிருந்தார்.