வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்றில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

by Staff Writer 29-11-2019 | 5:02 PM
Colombo (News 1st) அக்கரைப்பற்று - கண்ணகிபுரம் மலையடிவாரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அக்கரைப்பற்று - சின்னபனங்காடு, புளியம்பத்தை பகுதியை சேர்ந்த 29 வயதான விநாயகமூர்த்தி தேவரூபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக அவர் காணாமற்போயிருந்த நிலையில், இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்