யாழ்தேவி ரயில் தடம்புரண்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

by Staff Writer 28-11-2019 | 7:29 AM
Colombo (News 1st) வடக்கு ரயில் மார்க்கத்தில் கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் யாழ்தேவி ரயில் தடம்புரண்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் துரிதமாக விசாரணைகளை ஆரம்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். ரயில் பெட்டிகள் தடம்புரண்டமை தொடர்பான விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறியுள்ளார். அதற்கமைய, கொழும்பு - கோட்டையிலிருந்து பயணிக்கு ரயில் அம்பன்பொல வரையும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் கல்கமுவ வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு ரயில் நிலையங்களுக்கும் இடையில் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை 3 மணியளவில் தடம்புரண்டது. ரயில் பெட்டிகள் 5 தடம்புரண்டுள்ள நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஏனைய செய்திகள்