சீருடை வவுச்சர் வழங்கும் நடைமுறை தொடரும்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வவுச்சர் வழங்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்: கல்வி அமைச்சர்

by Staff Writer 28-11-2019 | 9:31 PM
Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வவுச்சர் வழங்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்தார். ஜனவரி மாதம் இரண்டாவது வாரமாகும் போது வவுச்சர்களை வழங்க தாம் தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் ஹோமாகம மஹிந்த ராஜபக்ஸ கல்லூரிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர்கள் இருவரும் இன்று பாடசாலையில் நடைபெற்ற காலை நேர கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்