by Staff Writer 28-11-2019 | 4:22 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் ஜெனரல் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தர, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் இந்த அரச விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.