இந்தியாவிற்கு பயணமாகும் ஜனாதிபதி

ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு பயணம்

by Staff Writer 28-11-2019 | 6:54 AM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது கன்னி வௌிநாட்டுப் பயணமாக இன்று (28) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள் அரச விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இந்தியாவிற்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் ஜெனரல் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியுடன் ஐவரடங்கிய குழுவொன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளது. ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தர, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரியின் செயலாளர் S.R. ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளனர். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் இந்த அரச விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.