by Staff Writer 28-11-2019 | 12:14 PM
Colombo (News 1st) தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் 80 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடக்கையின்போது இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கடற்பிராந்தியத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
படகில் பயணித்த 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
மன்னார் - பேசாளை பகுதியை சேர்ந்த 36 மற்றும் 39 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவிற்கும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.