மேல் மாகாணத்தில் போஸ்டர் அகற்றும் பணி ஆரம்பம்

மேல் மாகாணத்தில் போஸ்டர், கட்அவுட் அகற்றும் பணி ஆரம்பம்

by Staff Writer 27-11-2019 | 9:07 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்திலுள்ள வீதிகளின் இருமருங்கிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் தொலைபேசித் தூண்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆலோசனை மேல் மாாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரையில் கீழ், இந்த நடவடிக்கைகளை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது. தொழிலாளர்களை ஈடுபடுத்தி அனைத்து கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.