நைஜீரிய சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது

நைஜீரிய சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது

by Staff Writer 27-11-2019 | 1:38 PM
Colombo (News 1st) நைஜீரியாவில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் உயர்நிலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வைத்தியர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் பயன்படுத்துவதற்கு கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைதி சிறைச்சாலைக்குள் இருந்தவாறு 24 வருடங்களாக ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து இந்த அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைதியானவர் இதுவரை ஒரு மில்லியன் டொலருக்கும் அதிக தொகை ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கைது சிறைச்சாலைக்குள் தொலைபேசி மற்றும் இணையத்தளத்தை பயன்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.