அரசியல் பழிவாங்கலுக்குள்ளானவர்கள் தொடர்பில் ஆய்வு

அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்படவுள்ளது

by Staff Writer 27-11-2019 | 7:59 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கடந்த சில வருடங்களாக அரசியல் பழிவாங்கலுக்குள்ளான அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார். நாட்டிற்காக சரியான தீர்மானங்களை எடுக்கும் அரச அதிகாரிகளை பாதுகாப்பதற்கு தேவையான சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் இன்று அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.