மாநில அரசுகளுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கண்டனம்

காற்று மாசை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுகளுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கண்டனம்

by Staff Writer 26-11-2019 | 7:55 AM
Colombo (News 1st) காற்று மாசினால் உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து நகைப்பதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து மாநில அரசாங்கங்களும் காற்று மாசை கட்டுப்படுத்த தவறியுள்ளதாகவும் இந்திய உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அடர்த்தியான தூசு துகள்களினால் இந்தியாவின் பல நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டெல்லி தற்போது அபாய நிலையை எட்டியுள்ளதாக இந்திய உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.