கடற்றொழிலாளர்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

கடற்றொழிலாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

by Staff Writer 26-11-2019 | 10:55 AM
Colombo (News 1st) கடல் கொந்தளிப்பு காரணமாக ஒருநாள் மற்றும் சிறு மீன்பிடிப் படகுகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கடற்றொழில் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பத்மபிரிய தெரிவித்துள்ளார். குறிப்பாக, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காற்றின் வேகம் இடைக்கிடையே அதிகரிக்குமென்பதால், ஒருநாள் மற்றும் சிறு மீன்பிடிப் படகுகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. கடற்றொழிலுக்கு செல்வதாயின், உயிர்பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.