by Staff Writer 25-11-2019 | 2:36 PM
Colombo (News 1st) காலி - அஹூங்கல்ல, பலப்பிட்டிய பகுதியில் பேஸ்புக் வலைத்தளத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரந்தெணிய, கொஸ்கொட, மீடியாகொட, பலப்பிட்டிய, காலி மற்றும் பயாகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 முதல் 30 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 பேரை தவிர ஏனையோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
=======